Pages

பண்பாடு மாறாத பழங்குடியினர் [ஊட்டி மக்களின் வாழ்க்கை சரித்திரம்]

நாட்டின் வளர்சியில் தனித்துவம் மிக்கவர்கள் ஆண்களே. பெண்வழி சமுதாயத்தின் பின்வழி என்று பேசப்படும் இடம் தான் இந்தியாவின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி என்னும் பிரதேசம். கடந்த மாத இறுதியில் எமது ஊடக கற்கை நெறியின் ஒரு பகுதியாக 15 நாட்களை கொண்ட தமிழ்நாடு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்தோம். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சென்றிருந்தோம்.  அங்கு குறும்பர் இருளர் தோட்டாஸ் என்கின்ற பழங்குடி மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வியல் சம்பந்தமாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

எழுத்து வடிவமே இல்லாத ஒரு மொழி இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் இம் மக்கள் பேசுகின்ற மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது. பெயரில்லாத ஒரு வகை மொழியினை பேசிக்கொள்கின்றனர். எழுதுவதற்கு இன்று தமிழையே பயன்படுத்தி வருகின்றனர்.
இம் மக்கள் ஆரம்பத்தில் படிப்பறிவற்றவர்களாக காணப்பட்டனர்.  காட்டில் வேட்டையாடுதல்ää மீன்பிடித்தலää; சுள்ளிபொறுக்குதல்ää போன்றவற்றை தொழிலாக கொண்டிருந்தனர். படிப்படியான முன்னேற்றம் இவர்களது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
இவர்கள் வாழ்கின்ற காட்டுப்பகுதி அரச சொத்துடமை ஆக்கப் ;பட்டுள்ளது. இந்த மக்கள் பாரம்பரியமாக வாழ்கின்ற இடத்திலிருந்து எழுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இவ் வனப்பிரதேசத்தில் சுள்ளி பொறுக்கவதற்கும்ää வேட்டையாடுவதற்கும் இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கலாச்சாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இவர்கள் வேறு இனபெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்வதி;ல்லை. இருளர் இன மக்கள் மாமன் பெண்னை அல்லது ஆணை திருமணம் செய்ய வேண்டும். இன்ற குறும்பர் இனத்தவர்கள் வேற்றுத்திருமணத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
இவர்களின் வீட்டிற்கு செல்பவர்கள் திண்ணை மட்டுமே செல்லமுடியும். ஊள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இறைவனின் எழில் ஓவியங்களாய் பரந்து விரிந்து கிடக்கும் கிராமங்களில் வாழும் மக்களையும் அவர்களின் மரபு மொழிநடை பழக்கவழக்கம்ää பண்பாடுää நம்பிக்கைää சமய கலாச்சாரம்ää தொழில் வேடிக்கை வினோதம் கலை இலக்கியம் பண்பாடுகளை பிரதிபலிக்கும் பிம்பங்களே கிராமிய பாடல்கள். இத்தகைய பாடல்கள் இருளர் குறும்பர் இனத்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.
இவர்களுக்கு மரணம் சம்பவித்தால் எமது முறைகளை போல சில இறப்புக்காரியங்களை நிறைவு செய்த பின்னர் அவர்கள் அடக்கம் செய்வார்கள். கிரேக்கத்தில் காணப்பட்டது போன்று இறந்தவர்களை வழிபட்டால் அவர்களின் உடற் பாகங்களை உட்கொண்டால் அதீத சக்தி கிடைக்கும் என எண்ணிக் உட்கொண்டனர். இவர்கள் அவர்களை போல் இல்லா விட்டாலும் அடிப்படை பண்பான நம்பிக்கை இறந்தவர்களினால் அதீத சக்தி கிடைக்கும் என்பதிலிருந்து பிறக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலானவர் கடவுள் என எமது சமுதாய மரபுகளின் படி வணங்குகின்றோம். இவர்கள் தமது மூதாதையரää; இறந்தவர்களை வணங்கி வளிபட்ட பின்னரே இரண்டாவதாக கடவுளை வணங்குகின்றனர்.
  நாட்டின் தனித்துவம் மிக்கவர்கள் என பலநாடுகளில் போற்றப்படும் ஆண் சமுகம் இவர்களிடத்தில் இரண்டாவதாகவே பார்க்கப்படுகினறது. இங்கு தாய் வழி சமுதாய முறமை பின்பற்றப்படுகின்றது. எந்த முடிவை எடுப்பதாயினும் அதை பெண்னே தீர்மானிப்பதாய் அமைகின்றது.
இன்று திருமணத்திற்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது வரதட்சணை. பல பெண்கள் திருமண வயதை அடைந்தும் வாழ்ககை துணையில்லாமல்  வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் சமுதாயத்தில் வரதட்சணை கொடுமையோ மாமியார் கொடுமையோ இல்லை.
ஆன்மா ஒடுக்கும் இடம் தான் ஆலயம். இந்த ஆலயத்தில் தோட்டஸ் பழங்குடி இனப் பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கல் ஒன்று நடப்பட்டுள்ளது. அந்த கல்லை தாண்டி பெண்கள் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது.

மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப இந்த பழங்குடியினர் தம்மை மாற்றி அமைக்க முயல்கின்றனர். இன்று யாவரும் ஓரளவிற்கு எழுத்தறிவுää வாசிப்பு வீதத்தினை பெற்றுள்ளனர். தமக்கான ஒரு மொழி இருந்தாலும் தமிழை எழுதுவதால் இன்று கதைத்து தேர்ச்சி அடைந்தவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இவர்களின் சமுகத்தில் இருந்து தாதியரää; ஆசிரியர்ää சட்டத்தரணிää வைத்தியர் என பல்துறையிலும் உருவெடுக்கின்றனர். காலப்போக்கில் இவர்கள் கல்வி முறையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும்.

இம் மக்களுக்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. சுற்றுளாப்பயனிகளால் அசுத்தம் செய்யப்படும் நீரினையே வடிகட்டி பாவித்து வருகின்றனர்.
அரசாங்கத்தினால் இவர்களுக்க நில ஒதுக்கீடு இன்னும் வழங்கப் படவில்லை. தற்போது இவ் விடத்தை விட்டு எழுமாறு பணிக்கப்பட்டுள்ளனர் என வருத்தத்துடன் கூறினார்கள். மின்சார வசதிகளுக்கு அரசின் அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை. பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற இடம் அரச சொத்துடமை ஆக்கப்பட்டுள்ளமையால் சொந்த இடமின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் ஒரு வகை மொழி பேசினாலும் எழுத்து வடிவம் இன்மையால் காலப்போக்கில்  இவர்களது மொழி அழிவடைய கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இந்த மக்கள் வாழ்வியலில் முன்னேற்றம்  ஏற்பட்ட போதும் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்வது வரவேற்கத்தக்கதே

2 comments:

DHARUMAN said...

பண்பாடு மாறாத ஊட்டி பழங்குடியின
மக்களை நாம்எல்லோரும் ஆழ்மனதின்
வாழ்த்துக்களோடு வாழ்த்துவோம்

என்றும்
ஊட்டி பழங்குடி மக்களோடு

எல்.தருமன்
18.பட்டி

DHARUMAN said...

பண்பாடு மாறாத ஊட்டி பழங்குடியின
மக்களை நாம்எல்லோரும் ஆழ்மனதின்
வாழ்த்துக்களோடு வாழ்த்துவோம்

என்றும்
ஊட்டி பழங்குடி மக்களோடு

எல்.தருமன்
18.பட்டி

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls